தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே போல் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்:
மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்றும் காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் உள்ள கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுளள்து.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, போன்ற மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
மழைப்பதிவு:
சென்னை மற்றும் அதன் புறநகரை பொறுத்தவரை பொதுவாக அனைத்து இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 19 செ.மீ, நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் 16 செ.மீ, புவனகிரி, குடவாசல் பகுதிகளில் 15 செ.மீ, கொள்ளிடம் மற்றும் சென்னையில் 10 செ.மீ கனமழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக நாகப்பட்டினம், தூத்துக்குடி பகுதிகளில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
காற்றழுத்த தாழ்வு நிலை கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளதால் மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இன்று குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.