கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசியது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
குறும்படம்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் விபத்து போன்ற நிகழ்வுகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று நோக்கத்தோடு காவல்துறை நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அதிகாரி கூறியதாவது, இதற்கு முன்னர் போதை பொருள் தடுப்பு சம்பந்தமான குறும்படம் போட்டி குறித்து அனௌன்ஸ்மென்ட் தெரிவித்திருந்தோம். அந்த வகையில் கிட்டத்தட்ட 180 குறும்படங்கள் எங்களுக்கு வந்திருக்கிறது.
அதனை தலைசிறந்த இயக்குனரை வைத்து 10 குறும்படம் அளவிற்கு பில்டர் செய்து. அதில் இருந்து 5 வீடியோ shortlist செய்யப்படும். இதனை தொடர்ந்து அந்த 5 குறும்படங்களை இயக்கிய இயக்குனர்களுக்கு பிரபல லோகேஷ் கனகராஜை சந்திப்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் 5 குறும்படங்களில் சிறந்த படத்தை தேர்வு செய்து, அந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தில் அவருக்கு உதவி இயக்குனர் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதன் நோக்கம் அனைத்து இளைஞர்களும் போதை பொருளால் மாணவ, இளைஞர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று இந்த விழிப்புணர்வு குறும்பட நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.