நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி கட்சிகள் அனைத்தும் தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க. மற்றும் ஜனநாயக ஜனதா கட்சியினரிடையே தொகுதி ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு நிலவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரு கட்சியினரின் கூட்டணியில் முறிவு ஏற்பட்டதால், ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், திடீர் ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து இன்று (மார்ச் 12) மாலை புதிய சட்டமன்றக் குழு தலைவரை தேர்வு செய்யும் முக்கிய கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், சுயேட்சைகளுடன் கைகோர்த்து மீண்டும் ஆட்சியமைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.