நாட்டில் குடியுரிமை பெற புதிய இணையதளம் உருவாக்கம்.., மத்திய அரசு அதிரடி!!!

0
நாட்டில் குடியுரிமை பெற புதிய இணையதளம் உருவாக்கம்.., மத்திய அரசு அதிரடி!!!
மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றுவதற்கான மசோதாவை வெளியிட்டனர். ஆனால் அப்போதே இச்சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர கூடாது பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில் நேற்று மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் அமல் படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மற்றொரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற விண்ணப்பிக்க புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய நாட்டில் குடியுரிமை பெற தகுதியானவர்கள் indiancitizenshiponline.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் கூடிய விரைவில் புது மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here