தமிழகத்தில் CAA நடைமுறைப்படுத்தப்படாது.., தமிழக முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் CAA நடைமுறைப்படுத்தப்படாது.., தமிழக முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!
நாடு முழுவதும் மத்திய அரசு நேற்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான நடைமுறையை கொண்டு வந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதாவை நடைமுறைக்கு கொண்டு வரக்கூடாது பலரும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் மத்திய அரசு இப்போது அதை நடைமுறைப்படுத்தியது பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல மாநிலங்களில் இதற்கு எதிராக குரல் கொடுத்த வருகின்றன.
குறிப்பாக கேரள மாநிலத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த போவதில்லை என தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இப்போது தமிழக முதல்வரும் மத்திய பாஜக அரசு நடைமுறைப்படுத்திய CAA சட்டம் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. இதனால் தமிழகத்திலும் குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here