தமிழக அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்வு., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

0
தமிழக அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்வு., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

தமிழக அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான அகவிலைப்படி உயர்வு, தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்தாண்டு அறிவித்து இருந்தார். அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்துவதற்கான ஒப்புதல் அண்மையில் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் CAA நடைமுறைப்படுத்தப்படாது.., தமிழக முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

இதைத்தொடர்ந்து தற்போது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here