ஒன்றாம் முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று மாலை ஆலோசனை நடக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றால் தமிழகத்தில் பல மாதங்கள் திறக்கப்படாமல் இருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த 1 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அரசால் வெளியிடப்பட்டு இருந்தன. அதாவது 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் தற்போது தமிழகத்தில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மீதமுள்ள ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எப்பொழுது நேரடி வகுப்புகள் தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கொரோனா நோய் தடுப்பு நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிகள் திறக்கப்படும் என்றும் இதற்கான ஆலோசனை இன்று மாலை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்ததாவது, “கொரோனா பாதித்த சில மாணவர்கள் தற்போது நல்ல உடல் நலத்துடனே உள்ளனர். மாணவர்கள் இடையே அச்சமற்ற சூழல் உள்ளது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்” என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்