சென்னை உள்ளிட்ட நகரங்களில் வேலை நிமித்தமாக தங்கி இருக்கும் பலரும் பண்டிகை உள்ளிட்ட விடுமுறை தினங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் (டிச. 25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
அதன்படி நாளை டிசம்பர் 25 ஆம் தேதி காலை 04.30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து பெரம்பூர், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக கோழிக்கோடு-க்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் அன்றைய தினம் (டிச.25) நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
மீண்டும் உயர்கிறது மின் கட்டணம்.., கடும் அதிர்ச்சியில் மக்கள்.., அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி!!