தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் அவ்வப்போது மின் கட்டணம் உயர்வு குறித்த அறிவிப்புகள் வந்து கொண்டே உள்ளது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு கொண்டே வருகிறது. இந்நிலையில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு 50 காசு முதல் 75 காசு வரை, குறைந்த மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ. 6.35ல் இருந்து ரூ. 7 ஆக உயர்த்தவும், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கு கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.45ல் இருந்து ரூ. 6 ஆக உயர்த்தவும், அதி உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு ரூ.5.50ல் இருந்து ரூ.6 ஆகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் இணை மின்சார ஒழுங்கு ஆணையத்திடம் அனுமதி கோரி உள்ளனர். விரைவில் அந்த குழு புதுச்சேரியில் வந்து ஆய்வு செய்த பின்னரே இதற்கு அனுமதி வழங்க இருப்பதாக தெரிகிறது. தற்போது வெளியாகிய இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பால் மக்கள் பலரும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தில் இந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம்., அரசுக்கு பரந்த கோரிக்கை!!!