‘கால் வந்தாலே சித்ரா பதட்டமடைந்து விடுவார்’ – உண்மையை வெளியிட்ட ஹேமந்த் அப்பா!! சிக்குவாரா ரக்சன்!!

0

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டதை அடுத்து தொடர்ந்து பல மர்மங்கள் வெளியாகி வருகிறது. சித்ராவின் அம்மா ஹேமந்த்தை குற்றம் சாற்றி வரும் நிலையில் ஹேமந்த் அப்பாவோ சித்ராபற்றி பல விஷயங்களை கூறி திடுக்கிட வைத்துள்ளார்.

சித்ரா

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த சித்ரா தற்கொலை செய்துகொண்டதை அடுத்து தற்போது அவர் தற்கொலைக்கு யார் காரணம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். இதில் தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே சித்ராவின் நெஞ்சில் அடிபட்டிருப்பதாக அசிம் கூறியிருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் மக்கள் மத்தியிலும் சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம்?? என்ற கோவமும் இருந்து வருகிறது. சித்ராவின் கணவரான ஹேமந்த் நல்லவர் கிடையாது என சித்ராவின் தோழி கூறியிருந்தார். அதற்கு மேல் சித்ரா ரக்சனை காதலித்து வந்ததாகவும், இருவரும் தனியாக ரெசார்ட்டில் இருந்ததாகவும் அதனை வீடியோ எடுத்து ரக்சன் மிரட்டி வந்ததாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவும் இல்லை. இந்நிலையில் ஹேமந்த்தின் அப்பா தற்போது அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சித்ரா ஏற்கனவே 3 பேரை காதலித்து உள்ளதாகவும் அது தனக்கு இப்பொழுது ஊடகம் மூலமே தெரியவந்ததாகவும் கூறியுள்ளார். ஹேமந்த் ஏற்கனவே சித்ராவிற்கு கால் வந்தால் பதட்டமடைந்து வெளியே சென்று பேசுவார் என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் சித்ராவிற்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் வரை போயுள்ளது. இந்நிலையில் சித்ரா இறந்த பொழுது நான் தான் சித்ராவின் வீட்டில் சொன்னேன். அப்பொழுதெல்லாம் ஒன்றாக இருந்த அவர்கள் திடீரென ஹேமந்த்தை குற்றம் சாற்றுவது சந்தேகத்தை எழுப்புகிறது. என்று கூறியுள்ளார். இந்த வழக்கில் சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம் என்ற உண்மை கண்டிப்பாக தெரிய வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here