சீனர்கள் வனவிலங்குகள் உட்பட அனைத்து இறைச்சியையும் ஒரு கை பார்த்து விடுவார்கள். இந்நிலையில் அங்கு வனவிலங்குகளை உண்ணவும், விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் பீதி..!
சீனாவில் மனிதனை தவிர அனைத்து விலங்குகளைக்கும் உண்ணும் பழக்கம் உண்டு. பாம்பு முதல் நாய்கறி வரை அனைத்தையும் சீனர்கள் விரும்பி உண்பர். அதில் ஏதோ ஒரு விலங்கில் இருந்து தான் கொரோனா வைரஸ் எனப்படும் கொடிய வைரஸ் பரவி தற்போது உயிர் பலி வாங்கி வருகிறது. இதனால் சீனாவே கொலைநடுங்கி போய் உள்ளது.
சீனாவில் உண்ணப்படும் வனவிலங்குகளில் இருந்து தான் சார்ஸ், கொரோனா போன்ற கொடிய வைரஸ்கள் பரவி வருகின்றன. இதனால் சீனா மட்டுமின்றி பல உலக நாடுகள் பாதிக்கப்படுகின்றன. சீனாவின் உணவுப் பழக்கத்தை பல உலக நாடுகளும் கண்டித்தனர். அதற்க்கு சீனா அரசு, தமது உணவுப் பழக்க வழக்கங்களை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம் என கண்டனம் தெரிவித்தது.
தற்போது தடை..!
இந்நிலையில் சீன அரசு அந்நாட்டில் வனவிலங்குகளை உண்ணவும், விற்பனை செய்யவும் தடை செய்யும் சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இதர சீன பாராளுமன்ற அனுமதியும் கிடைத்துள்ளதால் அங்கு இந்த விதி கொண்டுவரப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |