ஒவ்வொரு இந்திய குடிமக்கள், குழந்தை முதல் அனைவரும் பெற்றிருக்க வேண்டிய அடையாள அட்டையாக ஆதார் உள்ளது. இது ஒரு ஆவணம், நிதி பரிவர்த்தனை மற்றும் அரசாங்கத்தின் நலத்திட்டங்களை பெரும் வகையிலும் பயன்படுகிறது. இந்தியாவில் 182 நாட்கள் வசித்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
பிறந்த குழந்தைக்கும் ஆதார் அட்டை கட்டாயமாதலால் பிறப்பு முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பால் ஆதார் வழங்கபடுகிறது. அதாவது, புகைப்படம் மட்டும் எடுத்து பயோமெட்ரிக் (கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேன்) செய்யாமல் நீல நிறத்தில் வழங்கப்படும் ஆதார் அட்டை “பால் ஆதார்”. பால் ஆதார் பெறுவதற்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களில் பெற்றோர் குழந்தையின் பிறப்பு சான்றுடன் சென்று பதிவு செய்வதன் மூலம் 90 நாட்களுக்குள் தபால் மூலம் ஆதார் அட்டையை பெறலாம்.
பெரு பாரா பேட்மிண்டன்: தங்கப்பதக்கங்களை அள்ளி குவித்த இந்தியா!!
தற்போது அதிக அளவிலான பெற்றோர்கள் பால் ஆதாரை புதுப்பிப்பதில்லை. இதனால், மத்திய அரசு பால் ஆதாரை புதுப்பிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. அதாவது, 5 வயது முதல் 15 வயது முடிந்த நிலையில் பால் ஆதாரை அப்டேட் செய்ய பயோமெட்ரிக் ஸ்கேன் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.