சர்வதேச பெரு பாரா பேட்மிண்டன் தொடரில், இந்தியா 6 தங்கம் உட்பட 14 பதக்கங்களை அள்ளி குவித்துள்ளது.
பெரு பாரா பேட்மிண்டன்:
பெரு பாரா பேட்மிண்டன் சர்வதேச போட்டியானது சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில், சுகந்த் கடம் தலைமையிலான இந்திய அணி பங்கு பெற்றது. இதில், ஆடவருக்கான SL4 ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் சுகந்த் கடம், சிங்கப்பூரின் சீ ஹியோங் ஆங்கை எதிர்கொண்டார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதில், ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடிய சுகந்த் கடம் 21-14, 21-15 என்ற செட் கணக்கில் சிங்கப்பூர் வீரரை வீழ்த்தினார். இதே போல, நேஹால் குப்தா SL3 பிரிவில், பிரான்சின் மாத்தியூ தாமஸை 21-16, 21-14 வீழ்த்தினார். இதனால், இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.
இவர்களை போல, பெண்களுக்கான SH6 மற்றும் SL3 பிரிவில், நித்யா ஸ்ரீ சுமதி சிவன் மற்றும் மந்தீப் கவுர், பெரு மற்றும் உக்ரைன் வீராங்கனைகளை வீழ்த்தி பதக்கங்களை வென்றனர். மேலும், ஆடவர் மற்றும் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் தங்கப் பதக்கங்களை குவித்துள்ளனர். இதன் மூலம், இந்தியா இந்த பெரு பாரா பேட்மிண்டன் தொடரில், 6 தங்கம் உட்பட 14 பதக்கங்களை கைப்பற்றி அசத்தி உள்ளது.