மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவை ஓடிடி தளத்தில் வெளியிட தமிழக அரசு தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழக அரசு திட்டம்:
சர்வதேச அளவிலான 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக துவங்கியது. கடந்த ஜூலை 28ஆம் தேதி, தொடங்கப்பட்ட இந்த நிகழ்வை பாரத பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இந்த விழாவில், நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் பிரம்மாண்டத்தை பார்த்து பிரதமர் நெகிழ்ந்து போனதாக செய்திகள் வெளியானது.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த, ஒலிம்பியாட் போட்டி வருகிற ஆகஸ்ட் 9ம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது. துவக்க விழாவை போன்று இறுதி விழாவையும், பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவை ஓடிடி தளத்தில் வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தம் 8ம் தேதிக்குள் நிறைவடையலாம் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது இந்த போட்டியின் நிறைவு விழா குறித்த ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்