மிக்ஜம் புயல் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது . மேலும் புயல் ஆந்திர பகுதியில் கரையை கடக்கும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதன் காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் நாளை முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தையும் ஒத்தி வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் அனைத்தும் மீண்டும் எப்போது நடைபெறும் என்று பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
தமிழக மாணவர்களே.., அரசு பணியை பெற எளிய வழி இதோ…, உடனே APPLY பண்ணுங்க!!