தற்போது சென்னையில் இன்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை மிக அதிரடியாக உயர்ந்துள்ளது. வரும் மாதங்களில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறவிருப்பதால் மக்கள் நகை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். தொடர்ச்சியாக தங்கத்தின் விலை உயர்வு தான் இதற்கு காரணம்.
தங்கம்:
கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இந்த புத்தாண்டு தொடங்கிய பின்பு தொடர்ச்சியாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இன்னும் சில தினங்களில் தை மாதம் பிறக்கவிருப்பதால் திருமணம், காதுகுத்து என அனைத்து சுபநிகழ்ச்சிகளை நடைபெறும். ஆனால் அதற்காக தங்கம் வாங்குவதற்கு தற்போது மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். காரணம் அந்த அளவிற்கு தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்று அதிகரிப்பு – சுகாதாரத்துறை அறிவிப்பு!!
இன்று மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை 1 சவுரனுக்கு 232 ரூபாய் உயர்ந்துள்ளது. மேலும் தற்போது 1 சவுரன் ஆபரண தங்கம் ரூ.39,080க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 கிராம் ஆபரணத்தங்கம் 29 ரூபாய் அதிகரித்து ரூ.4,885க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தூயத்தங்கம் 1 சவுரன் 42,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராம் தூயத்தங்கம் ரூ.5,269க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி இன்றைய நிலவர படி சென்னையில் 1 கிராம் ரூ.75.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1 கிலோ கட்டி வெள்ளி ரூ.75,100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.