சென்னை மக்களுக்கு அபாய எச்சரிக்கை., மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0
தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும்  மக்களுக்கு அவசர உதவி செய்வதற்கு சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது. இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே வேலைக்கு செல்பவர்கள்  கவனமாக  வீடு திரும்பும் படியும், பொதுமக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கும் படியும் சென்னை மாநகராட்சி  எச்சரிக்கை  கொடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here