தமிழகத்தில் அண்மையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட தொடர் கனமழை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதன் பின் மத்திய மாநில அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த சூழலில் குடியிருப்புகளில் சூழ்ந்த தண்ணீரால் நோய் தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டது.
Enewz Tamil WhatsApp Channel
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ முகாம்கள் மூலம் 5.64 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். அதேபோல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணி 40 சதவீதம் முடிவடைந்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.