மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் வாழ்வாதாரத்தை இழந்த சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு நிவாரண தொகை வழங்கப்பட்ட நிலையில், ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களின் வீடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவுறுத்தி இருந்தனர்.
EPFO சந்தாதாரர்களே.., உங்க புதிய வங்கி கணக்கை PF உடன் இணைக்க வேண்டுமா?? உடனே இத பண்ணுங்க!!!
அப்படி விண்ணப்பித்த சுமார் 5 லட்சத்திற்கும் மேலானவர்களுக்கு, இதுவரையிலும் வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை என பலரும் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் விடுபட்டவர்களில் தகுதியானவர்களுக்கு, இன்று (மார்ச் 1) வெள்ள நிவாரணம் ரூ.6,000, அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.