அரசு மற்றும் தனியார் துறைகளில் ஓய்வு பெறும் ஊழியர்களின் சம்பளத்தில் 1 சதவீதம் தொகையை பிடித்தம் செய்து நிறுவனங்கள் PF நிதியில் டெபாசிட் செய்து வருகின்றனர். இந்த தொகையானது அவர்கள் ஓய்வு பெற்ற பின் ஓய்வு காலத்தில் பயன்படும் வகையில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த தொகையை பெறுவதற்கு வங்கி கணக்கு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கும் சூழலில் ஒரு வேலை புதிய வங்கி கணக்கு திறந்தால் அதை எப்படி PF கணக்கில் சேர்ப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
- முதலில் EPFO ன் அதிகாரப்பூர்வ போர்ட்டல் பக்கத்திற்கு சென்று உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொண்டு உள்நுழையவும்.
- பின் manage என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதன் பின் KYC என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- அப்போது நீங்கள் புதிய கணக்கு திறந்த வங்கியைத் தேர்ந்தெடுத்து உங்கள் வங்கிக் கணக்கு எண், பெயர் மற்றும் IFSC குறியீட்டை உள்ளிடவும். பின்னர் Sumit என்பதைக் கிளிக் செய்யவும்.
- அதன் பின் உங்கள் முதலாளி/ நிறுவனத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, உங்களின் சமீபத்திய வங்கி விவரங்கள் அங்கீகரிக்கப்பட்ட KYC பிரிவில் பதிவேற்றம் செய்யப்படும்.