சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் இப்போது வேலவ ராமமூர்த்தி நடித்து வருகிறார். ஆனால் இதற்கு முன்னர் மாரிமுத்து குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே சம்பாதித்தார். ஆனால் இவர் எதிர்பாராத விதமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டப்பிங் செய்து கொண்டிருக்கும்போது மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். இவரது இறப்பு செய்தி அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களிடையும் சோகத்தை ஏற்படுத்தியது. இப்போது வரை எதிர்நீச்சல் சீரியல் பார்க்கும் அனைவருக்கும் மாரிமுத்து இல்லாதது மிகப்பெரிய குறையாக தான் உள்ளது. இப்படி இருக்கையில் மாரிமுத்துவின் இறப்பு இயற்கை அல்ல என ஒரு அகோரி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதாவது அந்த அகோரி கலையரசன் கூறியதாவது, மாரிமுத்துவின் இறப்பு இயற்கையானது கிடையாது. ஏனென்றால் அவர் நடித்த எதிர் நச்சல் சீரியல் தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற பல இடங்களிலும் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சீரியலில் அவர் முழுக்க முழுக்க பெண்களை டார்ச்சர் செய்பவராக நடித்திருந்தார். அந்த சீரியலை பார்க்கும்போது பல பெண்களும் இப்படி கொடுமைப்படுத்தும் இவனுக்கு ஒரு சாவு வராதா என திட்டி தீர்த்தனர். அவர்களது சாபத்தினால்தான் குணசேகரன் இறந்துவிட்டார் என அவர் கூறியுள்ளார்.