சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரண நிதியை நியாய விலைக்கடை மூலம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார், இருந்தாலும் சென்னையில் இருப்பவர்களில் பலரும் வெளியூர்களில் இருந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருப்பதால், ரேஷன் கார்டு இல்லாமல் நிவாரண நிதி வாங்கலாமா? என கேள்வி எழுந்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதையடுத்து ரேஷன் கார்டு இல்லாதவர்கள் மற்றும் விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நிவாரண நிதி எவ்வாறு? வழங்குவது என்பதை அரசு பரிசீலித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது. இது தொடர்பான முழுமையான விவரங்களை வெளியிடப்படும் அரசாணையில் தெரிவிக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.