கொரோனா அறிகுறி இருக்கா??உடனே இத செய்யுங்க!!சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!

0

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக இருந்து வரும் நிலையில் தற்போது கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு சில அறிவுரைகளை சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது.

கொரோனா அறிகுறி:

தமிழகத்தில் கடந்த ஆண்டின் முதல் அலையை விட தற்போது வீசப்படும் கொரோனாவின் இரண்டாவது அலையின் வீரியம் மிக அதிகமாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடியும் கொரோனா தொற்று கட்டுக்குள் வராமல் அதிகமாக பரவி வருகிறது. தற்போது கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு சென்னை மாநகராட்சி ஓர் அறிவுரையை வழங்கியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி கொரோனா அறிகுறி உள்ளவர்கள் 2 மணி நேரம், 4 மணி நேரம் இடைவேளை விட்டு சுமார் 16 மணி நேரம் குப்புற படுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. கடின உழைப்பை தவிர்த்து அறிகுறி உள்ளவர்கள் தனியறையில் ஓய்வு எடுக்க வேண்டும், மேலும் போதிய நீர்ச்சத்து உள்ள ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று எதிரொலி – ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி பலி!!

அதேபோல் மருத்துவர்களின் பரிந்துரைப்படி அறிகுறி உள்ளவர்கள் ivermectin மாத்திரையை (12 மி.கி. ஒரு முறை) 3 நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.மேலும் 3 நாள் அஜித்ரோமைசின் மாத்திரையையும் (500 மி.கி.), 5 நாள் வைட்டமின் சி(500 மி.கி.) மாத்திரையையும், 5 நாள் ஜின்க் (50 மி.கி.)5 நாள் ranitidine மாத்திரையையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து பாரசிட்டமால் 500மிகி மாத்திரைகளை ஒரு நாளைக்கு நான்கு முறை உட்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here