பாரத் பயோடெக் கோவாக்சின் வழங்க மறுத்துவிட்டது !!! – டெல்லி அரசாங்கம் குற்றச்சாட்டு
டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ட்விட்டரில் தற்போது பாரத் பயோடெக் கோவாக்சின் வழங்க மறுத்துவிட்டது என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
ட்விட்டரில் அவர் கூறியதாவது “நாங்கள் 1.34 கோடி டோஸ் தடுப்பூசி கேட்டிருந்தோம் # கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஒவ்வொன்றும் 67 லட்சம் ஆக கோரியிருந்தோம். நேற்று எங்களுக்கு கடிதம் வந்தது, அதில் அவை வழங்க முடியாது என்றும் ‘சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் உத்தரவின்படி நாங்கள் அனுப்புகிறோம் என்று கூறி அவர்கள் அதில் எழுதி இருந்தனர் என டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா குறிப்பிட்டுள்ளார்.
"We had demanded 1.34 cr doses, 67 lakhs each of #Covaxin and Covishield. Covaxin wrote to us yesterday saying that they can't provide. They wrote, 'we're making dispatches as per directives of concerned govt officials'": Delhi Deputy Chief Minister Manish Sisodia (ANI) pic.twitter.com/kOtC9jKcOy
— NDTV (@ndtv) May 12, 2021
“எங்கள் #CovidVaccine இருப்பு எங்களிடம் தீர்ந்துவிட்டது. மேலும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை வழங்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன, அதனால் கோவாக்சின் வழங்கும் மையங்களை நாங்கள் மூட வேண்டிய நிலை தற்போது உள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா.