இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஐபிஎல் சீசன், கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று (ஏப்ரல் 8) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற உள்ளது. இதுபோன்று ஐபிஎல் போட்டியை காண்பதற்கு, ரசிகர்கள் பலரும் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு சென்னை சேப்பாக்கத்தில் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருப்பதாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி ஐபிஎல் போட்டி நடைபெறும் நாட்களான ஏப்ரல் 8 (இன்று), 23, 28, மே 1, 24, 26 ஆகிய தேதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், மே 12ஆம் தேதி நண்பகல் 01.00 மணியிலிருந்து இரவு 7 மணி வரையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.