சென்னை தாம்பரத்தில் தலையில்லாமல் ஒருவர் இரு சக்கர வாகனம் ஒட்டி வந்ததை பார்த்து அங்கிருந்த போலீசுக்காரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தலையில்லாமல் பேய் வருகிறது, பூதம் வருகிறது என்று தாய்மார்கள் அவர்கள் குழந்தைகளை பயமுறுத்தி சாப்பாடு கொடுப்பர். ஆனால் சென்னை தாம்பரத்தில் தலையில்லாமல் ஒரு உருவம் இருசக்கர வாகனத்தில் வந்த வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது.
தலையில்லா மனிதன்
சென்னை போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே ஒரு இருசக்கர வாகனம் வந்துகொண்டிருந்தது. அந்த வாகனத்தில் தலையில்லாமல் தொப்பி கூலிங்கிளாஸ் மட்டும் வைத்துக்கொண்டு ஒரு உருவம் வந்தது. அதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அந்த வாகனம் நேராக அங்கிருந்த காவல்துறையினர் முன் நின்றது. அப்போது அந்த உருவத்துக்குள் இருந்து ஒருவர் ரோஜா பூ கொத்தை அங்கிருந்த போலீஸ்காரர்களிடம் கொடுத்தார். கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை, மீடியா நண்பர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்க இவ்வாறு வந்ததாக கூறினார் அந்த தலையில்லா நபர்.
அவர் ஒரு மேடை கலைஞர். அவர் பெயர் மதன்குமார். நன்றி தெரிவிக்க இவ்வாறு வந்தேன் என்று கூறினார். அவரை பார்த்த அங்கிருந்த மக்கள் பயத்தில் அவரை விட்டு நகர்ந்து சென்றனர்.
நன்றாக வாகனம் ஒட்டி செல்லும் போதும், தலைக்கவசம் அணிந்துள்ள போதும் விபத்துக்கள் ஏற்படுகிறது. நன்றி தெரிவிக்க வந்ததெல்லாம் சரிதான் ஆனால் முகம் தெரியும் போதே சிலர் நன்றாக வாகனம் ஒட்டுவதில்லை நீ முகத்தை மூடிக்கொண்டு வருகிறாய், சாலையில் பார்த்து செல் என்று அறிவுரை கூறி அவரை அனுப்பி வைத்தனர்.