அமெரிக்கா எச்-1பி விசா உரிய விதிமுறையை மாற்றியுள்ளது.கொரோனாவால் அமெரிக்கா பெரும் அழிவை கண்டுள்ளது எனவே சில விதிமுறைகளை மாற்றி வருகிறது, எச்-1பி விசா காலம் முடிவடைவது தொடர்பான விதிகளை தளர்த்துவது மற்றும் விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றுவோர், வேலை இழந்தாலும் 8 மாதங்கள் வரை அங்கேயே தங்கியிருக்க அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.
எச்-1பி விசா விதிமுறை மாற்றம்
கொரோனா தொற்றுப் பிரச்னை முடியும் வரையில் இந்தியர்களுக்கு வழங்கியுள்ள எச்1-பி மற்றும் பிற விசாக்களின் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று இந்தியா அமெரிக்காவிடம் கேட்டுக் கொண்டிருந்தது, அதை ஏற்றுக்கொண்ட அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதனால், அமெரிக்காவில் பணியாற்றும் ஏராளமான மென்பொறியாளர்கள் தங்களது வேலை மற்றும் விசா ரத்து போன்றவற்றை நினைத்து அச்சப்பட வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்று சுமார் 3 லட்சம் இந்தியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றுள்ள ஓர் ஊழியரின் பணி ஒப்பந்தத்தைக் குறிப்பிட்ட நிறுவனம் ரத்து செய்துவிட்டால், அவர் அடுத்த 60 நாள்களுக்குள் வேறு பணியைத் தேடிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விசா அனுமதி ரத்தாகி, இந்தியா திரும்ப நேரிடும்.
முழு விபரம்:
இந்த நிலையில், எச்1-பி விசா கட்டுப்பாடுகளை தளர்த்துவதாகவும் பிற நடவடிக்கைகளை தள்ளிப் போடுவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. முன்னதாக, எச்-1பி விசா பெற்றிருப்பவர்களின் சேவைகளை முடித்துக் கொள்ளுமாறு நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளதாக வெளியான சில செய்திகளைத் தொடர்ந்து, இந்தியர்களின் எச்-1பி விசா காலத்தை நீட்டிக்குமாறு டிரம்ப் அரசிடம் இந்தியா வேண்டுகோள் வைத்திருந்தது.
விசா ரத்து தொடர்பாக எந்தவொரு ஆணையோ அறிவுறுத்தலோ அமெரிக்க அரசால் பிறப்பிக்கப்படாத போதிலும் எச்-1பி விசாக்கள் பெற்றுப் பணியாற்றுவோரைத் தொடரச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.இவ்விஷயமாக, அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஸ்டீபன் பெய்கனுடன் தொலைபேசியில் இந்திய வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் ஸ்ரீங்கல பேசியதாகவும் டெல்லியிலுள்ள உயர் நிலை அரசு அலுவலர் ஒருவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |