நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது ஒடிசா மாநிலத்தில் மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், வணிக மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் காலை 11 மணி முதல் மதியம் 3:30 மணி வரை பணியில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.
மேலும் ஊழியர்கள் பணி செய்யாமல் இருப்பதை மாவட்ட அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் நல சங்க அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர். இது தவிர இந்த நேரத்தில் ஊழியர்கள் வெளியே செல்லாமல் இருக்க அந்தந்த நிறுவனத்தின் முதலாளிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.