இந்தியாவில் அனைத்து மாநிலங்களின் சமூக நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதி அளிக்கும் வகையில் வரிப்பகிர்வை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அதில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பா.ஜ.க. ஆளாத மாநிலங்களுக்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்குவது இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் 3 வது தவணையாக வரிப்பகிர்வை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
TNPSC “குரூப் 4” தேர்வில், தேர்ச்சி பெற சிறந்த வழி., இதுதான்? உடனே யூஸ் பண்ணிக்கோங்க!!
அதில அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு ரூ.25,495 கோடியும், பீகாருக்கு ரூ.14,295 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.11,157 கோடியும், தமிழகத்திற்கு ரூ.5,797 கோடியும் என மாநிலங்கள் வாரியாக மொத்தமாக ரூ.1.42 லட்சம் கோடி வெளியிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.