தொலைக்காட்சி வருவதற்கு முன்பு மக்களுக்கு பொழுது போக்காக இருந்து வந்தது தான் FM ரேடியோ. தற்போது இந்த ரேடியோ வாயிலாக பிரபல நிறுவனங்கள் தங்களது கம்பெனியை வளர்ச்சி அடைய விளம்பரம் செய்ய பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தனியார் FM ரேடியோ ஸ்டேஷன்களுடன் தொடர்புடைய பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து புதிய விலை நிர்ணய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரேடியோவில் வெறும் பத்து நொடிகள் ஒளிபரப்பாகும் விளம்பரத்திற்காக ரூ.52 நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இது ரூ.74 (43%) ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடக்கடவுளே.., பட்டாசு வெடிக்க தடையா? .., மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!