இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. மே 17ம் தேதியுடன் இது முடியவடைய உள்ள நிலையில் மே 20ம் தேதி முதல் நாடு முழுவதும் பேருந்து மற்றும் ரயில் சேவைகளை தொடங்க வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஊரடங்கு தளர்வுகள்:
இந்தியாவில் மே 3ம் தேதி முடியவிருந்த ஊரடங்கு உத்தரவு மே 17 வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை பல தளர்வுகள் வழங்கப்பட்டன. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அடிப்படையில் மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் வழங்கப்பட்டன. பச்சை மண்டலங்களில் 50% பேருந்துகள், டாக்ஸிகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதற்கடுத்து மே 20ம் தேதி முதல் போக்குவரத்துகளை தொடங்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
மேலும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டுத் தலங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் பொது இடங்களை திறக்க அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றுள் கட்டுப்பாடுகளுடன் மக்களை அனுமதிப்பது குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தொழில் துறையை மீட்டெடுக்கவும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |