தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் தேசிய பேரிடர் நிவாரண நிதியை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் கர்நாடகாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வறட்சி ஏற்பட்டுள்ளதால், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.18,171 கோடியை விடுவிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கு இதுவரையிலும் மத்திய அரசு பதில் அளிக்காததால், உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு புகார் மனு தாக்கல் செய்தது.
மனுவை பரிசீலித்த நீதிபதிகள், “மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு மாநில அரசுகளும் மனு தாக்கல் செய்த வண்ணம் உள்ளனர். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே போட்டி இருக்கக்கூடாது. எனவே மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்.” எனக்கூறி விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ரஜினிக்கு வில்லனாக களமிறங்கும் விஜய் பட நடிகர்.. இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!