மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக, கடந்த மார்ச் மாதம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. அதாவது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 3 சதவீதம் தான் அதிகரிக்கும் என தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மேற்கண்ட படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு உள்ள AICPI குறியீடு அடிப்படையில் தான் அகவிலைப்படி உயர்வு தீர்மானிக்கப்படுகிறது. அதன்படி ஜூலை மாதம் அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக 4 சதவீதம் உயர்வு இருக்கும் என நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசே வெளியிடும். அப்படி அகவிலைப்படி 4 சதவீதம் உயரும் பட்சத்தில், ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.18,000 எனில், ஏற்கனவே வழங்கப்படும் மாதாந்திர அகவிலைப்படி ரூ.7,560வுடன் கூடுதலாக ரூ.720 அதிகரிக்கும் என தகவல் தெரிவித்துள்ளனர்.