மத்திய அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, 2024 ஜனவரி முதல் அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்துள்ளனர். இருந்தாலும் இதற்கான பலன்கள் அடுத்த ஏப்ரல் மாத ஊதியத்தில் இருந்து தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது 50 சதவீத அகவிலைப்படி மட்டுமல்லாமல் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் என மூன்று மாதத்திற்கு உரிய அகவிலைப்படி நிலுவை தொகையும் சேர்த்த வரவு வைக்கப்படும்.
விக்னேஷ் சிவனுடனான விவாகரத்து சர்ச்சை.. நயன்தாரா போட்ட சோக பதிவு.. ரசிகர்கள் ஷாக்!!
இந்த நிலையில் கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 18 மாத அகவிலைப்படி நிலுவை தொகையும் மத்திய அரசு வெளியிடலாம் என தகவல் வெளிவந்துள்ளது. அப்படி அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவிக்கும் பட்சத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு பண மழை தான் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.