தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் காதல் ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்தவர்கள் தான் நயன்தாரா-விக்னேஷ் சிவன். இவர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை மகாபலிபுரத்தில் மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர். இவர்களின் கல்யாணம் மற்றும் இரட்டை குழந்தை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
தற்போது இந்த சர்ச்சைக்கு மத்தியில் நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் ஓர் பதிவை பதிவிட்டுள்ளார். அதில் ‘நான் தோற்றுவிட்டேன்’ என பதிவிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் சண்டைபோட்டு இப்படி பதிவிட்டுள்ளாரா அல்லது விவாகரத்து பெறப் போகிறாரா என்பது தெரியாமல் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இவர்களுக்கு திருமணமான ஒரு மாதத்தில் இருவரும் பிரிந்து சென்றனர் என்று ஒரு வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.