மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு, AICPI குறியீடு எண் மூலம் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்தை தொடர்ந்து ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 46 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து 2024 ஜனவரியில் அகவிலைப்படி (DA) 50%-ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
அத்தகைய சூழலில் அது பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு DA தொகை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும் அல்லது எட்டாவது ஊதியக்குழுவை (8th Pay Commission) அமைக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் இது தொடர்பாக மத்திய அரசே முடிவு எடுக்கும் என்பதால், வருகிற மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அளவில் சம்பள உயர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என வட்டாரத்தில் கூறி வருகின்றனர்.
அட இது சூப்பர்ல., உலகளவில் அந்த விஷயத்தில் முன்னணி வகிக்கும் சென்னை., குவியும் பாராட்டு!!