சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி மத்திய அரசின் உணவு தரவரிசை பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. அதாவது டெல்லியில் இருக்கும் விஞ்ஞான் பவனில் கோலாகலமாக நடைபெற்ற விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா உணவு தரவரிசை பட்டியலை வெளியிட்டார். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி இந்த விழாவை சீறும் சிறப்புமாக நடத்துகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் இந்த பட்டியலில் முதல் மூன்று இடத்தை பிடித்த நாடுகள் குறித்து இந்த பதிவில் காணலாம். அதாவது இந்த உணவு தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை கேரள மாநிலம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை பஞ்சாப் மாநிலம் பிடித்துள்ளது. அதே போல் மூன்றாவது இடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது. அதிலும் தமிழ் நாட்டு வரிசையில், கோவை முதலிடத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை மற்றும் மதுரை 75 % க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.