வெட்டுக்கிளியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் -ராகுல் காந்தி..!

0
rahul gandhi
rahul gandhi

வெட்டுக்கிளி தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்..!

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பதிப்பில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் இந்திய மக்களுக்கு ஒரு புதிய பிரச்சனை தொடங்கியுள்ளது.

ஈரான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து உருவாகும் இந்த பாலைவன வெட்டுக் கிளிகள் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப் போன்ற இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் படையெடுத்தன. உணவுப் பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருவதால் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

மத்திய அரசு உதவ வேண்டும்..!

இந்த பாலைவன வெட்டுக் கிளிகளால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை என விசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாலைவன வெட்டுக் கிளிகள் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here