எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், தற்போது இந்த மருத்துவமனை பணிகள் குறித்து மத்திய அரசு ஒரு தகவல் வெளியிட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை:
பொதுவாக எந்த நோயால் மக்கள் பாதிக்கப்பட்டாலும் ஒரே இடத்தில் எல்லா வசதிகளும் இருக்கும் ஒரே மருத்துவமனை என்றால் அது எய்ம்ஸ் மருத்துவமனை தான். இதில் கண், கை, கால், இதயம், மூளை போன்ற உறுப்புகளில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளுக்கும் இந்த மருத்துவமையில் தீர்வு கிடைக்கும். தற்போது இந்த மருத்துவமனை இந்தியாவில் 12 இடத்தில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் புதிதாக மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர கடந்த 2015-ம் ஆண்டு, பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட, அதன் பின்னர் ஜூன் 2018-ல் மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 2019ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் சமீபத்தில் 90 சதவிகிதம் நிதி ஒதுக்கி பணிகள் முடிந்து விட்டதாக கடந்த செப்டம்பர் மாதம் மதுரைக்கு வந்த பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
யம்மா கிரண்.,,இப்படி ஒரு காட்சிய கொடுத்து மொத்த பேரின் தூக்கத்துலயும் மண்ணை போட்டீங்களே!!
தற்போது எய்ம்ஸ் கட்டுமான நிலை குறித்து, தென்காசியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா கேட்ட ஆர்.டி.ஐ கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அளித்த பதிலில், “திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 2026-ல் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் முடியும் என்று மத்திய அரசு சார்பில் மதுரை கிளை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.