ஜிஎஸ்டி லாட்டரி திட்டம் (GST Lottery) – பில் வாங்குவதை ஊக்குவிக்க அரசு அசத்தல் திட்டம்..!

0
GST
GST

கடைகளில் பொருட்கள் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் பில் ரசீது வாங்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு ‘ஜிஎஸ்டி லாட்டரி திட்டம்’ என்ற திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் துறை உறுப்பினர், ஜான் ஜோசப் அவர்கள் அனைவரும், பொருட்கள் வாங்கும் போதும், சேவைகளை பெறும் போதும், பில் ரசீது கேட்டு வாங்க வேண்டும். இதனை ஊக்குவிப்பதற்காக இந்த லாட்டரி திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

நுகர்வோர் ஒரு பொருளை வாங்கும் போது 5,12,18 மற்றும் 28 சதவீதம் வரை வரி செலுத்துவர். இந்த ரசீதை மத்திய அரசு வெளியிடவுள்ள ஜிஎஸ்டி லாட்டரி திட்டத்தின் வலைதளத்தில் பதிவிட வேண்டும். அதன் மூலம் குலுக்கல் முறையில் அரசு வெற்றியாளரை தீர்மானிக்கும்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

பதிவிடக் கூடிய வரியின் குறைந்தபட்ச மதிப்பை மத்திய நிதியமைச்சர் தலைமையிலான குழு தீர்மானிக்கும். இந்த லாட்டரியில் வெற்றி பெறுவோருக்கு 10 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த குலுக்கல் ஆனது குறிப்பிட்ட இடைவெளியில் மின்னணு முறையில் நடைபெற உள்ளது.

நிறுவனங்கள் போலி ஜி.எஸ்.டி., எண் மூலம் நுகர்வோர் ஏமாற்றப்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தயாரிப்பு நிறுவனங்கள், ஜி.எஸ்.டி., வரி குறைப்பின் பலனை, நுகர்வோருக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காத நிறுவனங்கள் மீது, மிகை லாப தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு வசூலிக்கப்படும் தொகையில் ஒரு பங்கு லாட்டரியில் வெற்றிபெறுவோருக்கு வழங்கப்பட உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here