தற்போதைய சூழ்நிலையில் அதிகமான மக்கள் ஹோட்டலில் உணவுகளை வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சமீப காலமாக ஹோட்டல்களில் தரமான உணவுகளை தரவில்லை என்றும் உணவகங்களில் தூய்மையாக வைத்துக் கொள்ளவில்லை என்றும், உணவுகளை சமைக்கும் பொழுது சுத்தமாக செய்யவில்லை என்று சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ். நடராஜன் என்பவர் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் ஹோட்டல்களில் சுத்தமான உணவுகள் கொடுக்காததால் தமிழகத்தில் உணவருந்திய பின் உயிர் இழக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். இதனால் தமிழகத்தில் இருக்கும் எல்லா ஹோட்டல்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பிக் பாஸ் மகத்தோட பையன் இவளோ பெருசா வளர்ந்துட்டானா?? ட்ரெண்டிங்காகும் பேமிலி போட்டோஸ்!!
இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது, பெரிய சிட்டிகளிலும் மற்றும் கிராமப்புறங்களில் அதிகமான ஹோட்டல்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் எல்லா ஹோட்டல்களில் கேமராக்கள் பொறுத்த வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையில் எந்த வித சாத்தியமும் இல்லை என்று இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.