12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் குளறுபடி.., மீண்டும் ஏப்ரல் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும்.., வெளியான அறிவிப்பு!!!

0
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் குளறுபடி.., மீண்டும் ஏப்ரல் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும்.., வெளியான அறிவிப்பு!!!
தமிழக மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் கடந்த மார்ச் மாதம் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. மேலும் இந்த பொதுத் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்ற விவகாரங்களும் வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் CISCE 12-ஆம் வகுப்பு உளவியல் தேர்வுக்கான வினாத்தாள் தொலைந்து விட்டதாக கூறி இத்தேர்வினை ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்வு வரும் ஏப்ரல் 4ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தேர்வுக்கான வினாத்தாளை விரைவில் ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என வாரியத்தின் துணைச்செயலாளர் சங்கீதா பாட்டிய தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here