மதுபான ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் அவரை மார்ச் 28ஆம் தேதி வரை அமலாக்கத்துறையினர் காவலில் வைத்துள்ளனர். இந்நிலையில் இதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று நீதிபதி ஸ்வர்ன காந்த் சர்மா தலைமையில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த சூழ்நிலையில் இப்போது மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அமலாக்கத் துறையினர் காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை CBI காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.