கொரோனா தடுப்பு பணிக்கு பணியாளர்களை நியமிக்க தனியார் நிறுவனத்திற்கு அரசு அளித்த அனுமதியை முறைகேடு காரணமாக ரத்து செய்துள்ளது.
முறைகேடு
கொரோனா தற்போது நாடெங்கிலும் பரவி வருகிறது. மேலும் இது உலக பணக்கார நாட்டுகளையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அது மட்டுமில்லாமல் இந்தியாவிலும் இந்த கோரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதனை அடுத்து சென்னையிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அரசு கொரோனா தடுப்பு பணிக்காக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமிக்க தனியார் துறைக்கு அனுமதி அளித்திருந்தது. இதனால் தனியார் துறை மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்களை பணிக்கமர்த்தியது. இதனை தொடர்ந்து இந்த தனியார் துறை கோரோனா தடுப்பு பணியாளர்களை நியமிக்க கமிசின் கேட்பதாக வழக்கு பதியப்பட்டது. தற்போது அதற்கு ஆதாரமாக ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த முறைகேட்டின் காரணமாக தனியார் துறைக்கு அளித்த அனுமதியை அரசு ரத்து செய்துள்ளது.