கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டு நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. அப்போது முதல் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நாட்டில் பல்வேறு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளது.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று முறையீடு நடத்தப்பட உள்ளது. அதன்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான விசாரணை குழு முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.