தமிழக மக்களே., இந்த பகுதியில் மழைக்கு வாய்ப்பு., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

0
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதியில் கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வானிலை மையம் மழை குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது 20.3.2024 மற்றும் 21.3.2024 தேதிகளில் தமிழகத்தின் கடலோரம், காரைக்கால் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் மார்ச் 15 முதல் மார்ச் 19 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையை நிலவ கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரையில், வானம் ஓரளவுக்கு மேகமுட்டத்துடனே இருக்குமே தவிர அதிக பட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here