கடந்த ஏப்ரல் 6ம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதைத்தொடர்ந்து அன்றைய தினமே விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தொகுதியில் எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்த நிலையில் தேர்தல் ஆணையம் ஓர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களே., பயிலும் பள்ளியிலே புதிய ஆதார்.. முழு விவரம் உள்ளே!!