பொதுவாக ஏதாவது விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இப்போது வரும் ஜூன் 21 ஆம் தேதி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாங்கனித் திருவிழா நடைபெற உள்ளது.
இந்த விழாவினை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வருவது வழக்கம். இதனால் அவர்களின் பாதுகாப்பு கருதி வரும் ஜூன் 21 ஆம் தேதி காரைக்கால் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்க அம்மாவட்ட ஆட்சியருக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.