CSK அணி கோப்பையை வென்றதும் பிராவோ போட்ட ஆட்டம்…, கடுப்பான மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்!!

0
CSK அணி கோப்பையை வென்றதும் பிராவோ போட்ட ஆட்டம்..., கடுப்பான மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்!!
CSK அணி கோப்பையை வென்றதும் பிராவோ போட்ட ஆட்டம்..., கடுப்பான மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16 வது சீசனை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, அதிக முறை சாம்பியன் (5 முறை) பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டது. இந்த தொடருக்கான மினி ஏலம் தொடங்கு வதற்கு முன்னேரே CSK அணியின் நம்பர் ஒன் பவுலரான டுவைன் பிராவோ ஐபிஎல்-லிருந்து விலகுவதாக அறிவித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து, CSK அணி நிர்வாகமானது இவரது ஓய்வை ஏற்று அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக இவரை அறிவித்தது. இதன் காரணமாக, நடந்து முடிந்த IPLல் தனக்கு தெரிந்த பலவற்றை CSK அணியின் பவுலர்களான தீபக் சாஹர், மதீஷ் பத்திரன, மகேஷ் தீக்ஷனா, ஜடேஜா உள்ளிட்டோர் தங்களது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருந்தனர்.

சீரியலாகவே இருந்தாலும் ஒரு மனசாட்சி வேண்டாமா? நெட்டிசன்களின் ட்ரோலில் சிக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

CSK அணி சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, டுவைன் பிராவோ பேட்டி ஒன்றை அளித்திருந்தார். இதில், “நான் பயிற்சியாளராக கோப்பையை வென்றதே எனது நண்பர் பார்த்துக் கொண்டிருப்பார் என நம்புகிறேன்” என்று கூறியிருந்தார். அதாவது, இவரது நெருங்கிய நண்பரான பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இந்த சீசனில் மும்பை அணி பிளே ஆப்பின் தகுதி சுற்றுடன் வெளியேறியதை மறைமுகமாக குறிப்பிட்டு தான் பிராவோ அவ்வாறு கூறியுள்ளார் என கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here