சீரியலாகவே இருந்தாலும் ஒரு மனசாட்சி வேண்டாமா? நெட்டிசன்களின் ட்ரோலில் சிக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

0
சீரியலாகவே இருந்தாலும் ஒரு மனசாட்சி வேண்டாமா? நெட்டிசன்களின் ட்ரோலில் சிக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ்!!
சீரியலாகவே இருந்தாலும் ஒரு மனசாட்சி வேண்டாமா? நெட்டிசன்களின் ட்ரோலில் சிக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

ஒற்றுமையாக இருந்த மூர்த்தி குடும்பத்திற்குள் ஏகப்பட்ட குழப்பங்கள் பிரச்சனைகள் அடுத்தடுத்து காட்டுத்தீ போல் பரவி வருகிறது. பேங்கில் வேலை கிடைத்து விட்ட பகுமானத்தில் வளர்த்த அண்ணன் அண்ணியை விட்டு வந்த கண்ணன், ஐஸ்வர்யாவின் ஆடம்பரத்தால் கடனுக்கு மேல் கடன் வாங்கி தற்போது பெரிய பிரச்சனையில் சிக்கி கொண்டார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் கிரெடிட் கார்டில் வாங்கிய கடனை அடைக்காததால் பேங்க் ஆபிஸர்களுடன் ஏற்பட்ட சண்டையில் கதிர் ஜெயிலுக்கு சென்றுள்ளார். இந்த நேரத்தில் ஒன்று பட்ட மூர்த்தியின் சகோதரர்கள் பேங்க் officer களிடம் கேஸை வாபஸ் வாங்கும் படி கூற அதற்கு 5 லட்சம் கடனை உடனே அடைக்கும் படி கூறுகின்றனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் கண்ணன் வாங்கியது 3.45 லட்சம் கடன் என மாற்றி சொல்லியுள்ளனர்.இதுபோக ஒரு பேங்கில் வேலை பார்க்கும் ஒருவருக்கு கிரெடிட் கார்டில் கடன் வாங்கினால் என்ன பிரச்சனை வரும் என தெரிந்திருக்கும்.

தங்கை மீது உள்ள பாசத்தால், விஜய் செய்த செயல்., மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்!!

மேலும் 30 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒருவருக்கு credit கார்டில் எப்படி 5 லட்சம் கடன் பெற முடியும். சீரியலாகவே இருந்தாலும் ஒரு மனசாட்சி வேண்டாமா என கமெண்ட் செய்து வருகின்றனர். இதுபோக கடனை அடைக்க நகையை அடகு வைக்க கையில் இருக்கும் வளையலை தனம் கொடுக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் தனம் அணிந்திருப்பதோ கண்ணாடி வளையல். அதை எப்படி அடகு வைக்க முடியும் என சொல்லி அவரையும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here